செங்கல்பட்டு மாவட்டத்தில் 11 வட்டாட்சியர்கள் பணியிடமாற்றம்

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு மாவட்ட வருவாய் துறை, வழங்கல் துறை, ஆதிதிராவிடர் நலத் துறை, சமூக பாதுகாப்பு திட்டம் உள்ளிட்டவற்றில் பணியாற்றி வந்த 11 வட்டாட்சியர்கள் தற்போது பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப் போரூர் வட்டாட்சியராக இருந்த கே.செந்தில்குமார் செங்கல்பட்டு மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர் முக உதவியாளராகவும், திருக்கழுக் குன்றம் வட்டாட்சியராக இருந்த ஏ.தங்கராஜ் மதுராந்தகம் ஆதிதிராவிட நலத் துறை தனி வட்டாட்சியராகவும், பல்லாவரம் வட்டாட்சியராக இருந்த ஆர்.ராஜேந்திரன் செய்யூர் வட்டாட்சிய ராகவும், மதுராந்தகம் தனி வட்டாட்சி யராக இருந்த (ச.பா.தி) என்.பர்வதம், திருக்கழுக்குன்றம் வட்டாட்சியரா கவும், ஆலந்தூரில் உள்ள பூந்த மல்லி நகர மேம்பாட்டு திட்ட தனி வட்டாட்சியராக இருந்த ஜி.கனிமொழி மதுராந்தகம் வட்டாட்சியராகவும், நந்தனம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தனி வட்டாட்சியர் ஆர்.ரவி பல்லாவரம் வட்டாட்சியராகவும், மது ராந்தகம் ஆதிதிராவிடர் நலத் துறை தனி வட்டாட்சியராக இருந்த ரஞ்சினி திருப்போரூர் வட்டாட்சியராகவும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல் மதுராந்தகம் வட்டாட்சி யராக இருந்த வேல்முருகன், மதுராந் தகம் கோட்டாட்சியரின் நேர்முக உதவி யாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு வட்ட வழங் கல் அலுவலரின் நேர்முக உதவியா ளராக இருந்த எஸ்.ராஜன் பூந்த மல்லி நகர மேம்பாட்டு திட்ட தனி வட்டாட்சியராகவும், தாம்பரம் நிலவரித் திட்டம், தனி வட்டாட்சியர் வீ.வெங்கட்ரமணன் நந்தனம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தனி வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுராந்தகம், வருவாய் கோட்டாட்சியரின் நேர் முக உதவியாளராக இருந்த பாலாஜி, மதுராந்தகம் தனி (ச.பா.தி) வட்டாட்சியராக நியமிக்கப் பட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE