தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு செப்.7-க்கு பின்பு இடைத்தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.
திமுக எம்எல்ஏக்களாக இருந்த கே.பி.பி.சாமி, காத்தவராயன், ஜெ.அன்பழகன் ஆகியோரின் மறைவால் திருவொற்றியூர், குடியாத்தம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளன. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, ஒரு தொகுதி காலியானால் அங்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி, திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகளில் ஆகஸ்ட் இறுதிக்குள்ளும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்கு இந்த ஆண்டு இறுதிக்குள்ளும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
கரோனா, மழை காரணங்களால் தமிழகத்தின் குடியாத்தம், திருவொற்றியூர்உட்பட நாடு முழுவதும் காலியாக உள்ள 8 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை வரும் செப்டம்பர் 7-ம் தேதிக்குள் நடத்த இயலாது என்றும், சூழல் சரியான பிறகுநடத்த வாய்ப்புள்ளதாகவும் தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது.
இந்நிலையில், தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறியதாவது: செப். 7 வரைஇடைத்தேர்தல்களை நடத்த வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதே நேரம் தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய 2 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்வது போன்ற பணிகள் தொடங்கிவிட்டன. செப்.7-க்குப் பிறகு எப்போது தேர்தல் தேதி அறிவித்தாலும் நடத்த தயார் நிலையில் உள்ளோம்.
கரோனாவால் உயிரிழந்தவர்கள் பட்டியலை மாநகராட்சியே வழங்கலாம். இல்லாவிட்டால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், படிவம் 7-ஐ பூர்த்திசெய்து இறந்தவர்கள் பெயரை பட்டியலில் இருந்து நீக்குவதற்காக விண்ணப்பிக்கலாம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
56 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago