தமிழக அரசு அளிக்கும் நீட் தேர்வு பயிற்சியால் 100 மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கு செல்வார்கள் என் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இந்தியாவிலேயே முதன்முறையாக குடிமராமத்து என்ற தூர்வாரும் பணியை கடந்த 2 ஆண்டுகளாக தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. பவானி ஆற்றில் 4 தடுப்பணைகள் கட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு அரசிடம் ஒப்புதல் பெறப்பட உள்ளது. ரூ.103 கோடி செலவில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் மூலம் 1 டிஎம்சி தண்ணீர் தேக்க முடியும். அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணிகள், 3 கட்டப்பணிகளாக நடந்து வருகிறது. ஊரடங்கால் நிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
நீட் தேர்வுக்கான பயிற்சிகள் அரசு சார்பில் 472 மையங்களில் ஜூன் 2-வது வாரத்துக்கு பின்னர் தொடங்கும். ஏற்கெனவே ஜனவரி முதல் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், 27 ஆயிரம் மாணவர்கள் பயிற்சி பெற்றனர். அதில் 3,700 சிறந்த மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 9 கல்லூரிகளில் 35 நாட்கள் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சி பெறும் மாணவர்களில் குறைந்தது 100 பேர் மருத்துவப் படிப்புக்கு செல்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேவையானவசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பது குறித்து சூழ்நிலைக்குஏற்ப அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
31 mins ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago