வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்ப பதிவு ஆரம்பம்: தமிழக அரசு அறிவிப்பு

ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் சென்று சிக்கியுள்ளோர் தமிழகம் திரும்பி வரப் பதிவு செய்யும் இணையதளம் குறித்த தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த தமிழக அரசின் செய்திக்குறிப்பு:

இந்தியா முழுவதும், கரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு மார்ச் 25-ம் தேதி முதல் அமலில் இருந்து வருகிறது. இதனால், தேசிய அளவில் விமானச் சேவை, ரயில் சேவை மற்றும் பொதுப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த பல மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள், யாத்திரிகர்கள் உள்ளிட்டோர் பல்வேறு இடங்களில் உள்ளனர்.

இந்தியாவின் இதர மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்குத் திரும்ப விரும்பும் தமிழர்கள் nonresidenttamil.org என்ற இணைய முகப்பில் உள்ள “Return to Tamil Nadu” என்ற இணையப் படிவம் (பச்சை நிற பதிவு பட்டன்) வாயிலாகப் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்தோர், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது தங்கியுள்ளனர். அவர்கள் குறித்த விவரத்தை nonresidenttamil.org என்ற இணைய முகப்பில் (பழுப்பு நிற பதிவு பட்டன்) வாயிலாகப் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்