2-ம் கட்ட கலந்தாய்வு 3-ம் நாள்: மருத்துவப் படிப்பில் 435 இடங்கள் நிரம்பின

மருத்துவப் படிப்புக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வின் 3-ம் நாளில் 435 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் நிரம்பின.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று நடந்தது. இந்த கலந்தாய்வில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 24 எம்பிபிஎஸ் இடங்கள், தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 1 பிடிஎஸ் இடம், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 410 பிடிஎஸ் இடம் என மொத்தம் 435 இடங்கள் நிரம்பின. இந்நிலையில் கடைசி நாள் கலந்தாய்வு இன்று நடக்கிறது.

அகில இந்திய மருத்துவ நுழைவு தேர்வு இன்று நடக்கிறது. இந்த தேர்வை எழுதும் மாணவ, மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், தங்களது பெற்றோர் அல்லது நெருங்கிய உறவினர்களை அழைப்புக் கடிதத்துடன் அனுப்பி கலந்தாய்வில் தனக்கு பதிலாக பங்கேற்க செய்யலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்