தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு: தயாநிதி மாறனுக்கு முன்ஜாமீன் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பை முறைகேடாக பயன் படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய அமைச் சர் தயாநிதி மாறனுக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, 323 பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளையும், 19 போஸ்ட் பெய்டு செல்போன் இணைப்புகளையும் முறைகேடாக பயன்படுத்தியதாகவும், அதனால் அரசுக்கு ரூ.1 கோடியே 20 லட்சம் இழப்பு ஏற்பட்டதாகவும் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இவ்வழக்கு விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இன்று (ஜூலை 1) நேரில் ஆஜராகும் படி தயாநிதி மாறனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

இந்த வழக்கில் 2011-ம் ஆண்டு முதல்கட்ட விசாரணை நடந்தது. 2013-ம் ஆண்டு ஜூலை 23-ம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. 2011-ம் ஆண்டு ஜனவரி மற்றும் அக்டோபரில் எனக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. நான் ஒரு அப்பாவி என சிபிஐ அதிகாரிகளுக்கு பல தடவை கடிதம் எழுதியுள்ளேன். இவ்வழக்கு தொடர்பாக 3 பேரை சிபிஐ கைது செய்தது.

இது ஒரு சிவில் வழக்காகும். இதுவரை 60 சாட்சிகள் விசாரிக்கப் பட்டுள்ளனர். 200-க்கும் மேற்பட்ட ஆவணங்களை சேகரித்துள்ளனர். 4 வருடங்களுக்கு மேலாகியும் இன்னமும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இவ் வழக்கில் என்னை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். என் மீதான குற்றச்சாட்டுகள் எல்லாம் அடிப் படையற்றது. உள்நோக்கம் கொண்டது. குற்றச் சதி அடிப்படை யில் தொடரப்பட்டுள்ள இவ் வழக்கில் என்னை கைது செய்வதே சிபிஐயின் நோக்கமாக இருக்கிறது.

இந்நிலையில், வழக்கு விசார ணைக்காக டெல்லி சிபிஐ அலுவல கத்தில் ஆஜராகுமாறு எனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, எனக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பையா, “மனுதாரருக்கு 6 வாரம் இடைக்கால முன்ஜாமீன் அளிக்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் வழக்கு விசார ணைக்கு மனுதாரர் ஒத்துழைக்கா விட்டால், சிபிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தை அணுகலாம்’’ என்று உத்தரவிட்டார்.

இதையடுத்து, நேற்று மாலை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்பு, தயாநிதி மாறன் சரணடைந்து முன்ஜாமீன் பெற்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்