சென்னையில் மேலும் 5 குடும்ப நல நீதிமன்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று மாநில அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை யில் நடைபெறும் தனது விவாகரத்து வழக்கை சென்னை குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிடக் கோரி தனியார் வங்கி பெண் ஊழியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை சென்னைக்கு மாற்றி உத்தரவிட்ட நீதிபதி என்.கிருபாகரன், சென்னை குடும்ப நல நீதிமன்றங்களின் வழக்குகள் எண்ணிக்கை, அங்கே பெண்களுக்கு செய்து தரப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், குடும்ப நல நீதிமன்றங்கள் கூடுதலாக ஏற்படுத்த வேண்டுமா என்பன உட்பட பல்வேறு வினாக்களை எழுப்பி அதற்கு உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் மற்றும் சட்டத்துறை செயலாளர் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இவ்வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசார ணைக்கு வந்தது. அப்போது தலைமைப் பதிவாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை யில், சென்னையில் மேலும் 5 குடும்ப நல நீதிமன்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று மாநில அரசுக்கு பரிந்துரை செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago