மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் தொழிற்சாலைகளுக்கு கடந்த 2011-12 நிதியாண்டு முதல் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
2014-2015 நிதியாண்டுக்கான பசுமை விருதுகள் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட உள்ளன. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தொழிற்சாலைகள் தங்கள் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகங்களில் ஜூலை 31-ம் தேதிக்குள் வழங்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் தொழிற்சாலை, சுற்றுச்சூழல் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அத்தொழிற்சாலையில் எரிபொருட்களை குறைத்திருப்பது, மின் கழிவுகளை கையாளும் நடைமுறைகள், காற்று கண்காணிப்பு மையத்துடன் இணைந்திருப்பது, தொழிற்சாலையின் உள் மற்றும் வெளிப் பகுதியில் பசுமை சூழலை மேம்படுத்தியது, ஆரம்ப சுகாதார நிலையங்களை தத்தெடுத்து, அங்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்தியது, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தியிருப்பது, திடக்கழிவுகளை மறு பயன்பாடு செய்தது ஆகியவை தொடர்பான விவரங்களையும் விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago