19 கிலோ நகை திருட்டு வழக்கு: மேலும் 100 பவுன் மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வங்கியில் 19 கிலோ நகைகள் திருடப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டவரின் உறவினர்கள் மூலம் மேலும் 100 பவுன் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

குளத்தூர் சிட்டி யூனியன் வங்கி யில் கடந்த நவம்பர் 30-ம் தேதி 19 கிலோ தங்க நகைகள் திருடு போயின. இந்த வழக்கில் கோபால கிருஷ்ணன், அவரது சகோதரர் அழகர்சாமி, ஆனந்தகுமார் ஆகியோரை கீரனூர் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 கிலோ தங்கம், ரூ.1.5 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கோபாலகிருஷ்ணன், அழகர்சாமியின் பெயரில் யாரே னும் நகை அடகு வைத்துள்ளார் களா என்பது குறித்த விவரத்தைத் தெரிவிக்குமாறு கீரனூர், குளத்தூர் பகுதிகளில் காவல் துணைக் காண்காணிப்பாளர் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, சிலர் போலீஸாரிடம் கொடுத்த தகவலின் பேரில் 100 பவுன் நகைகளைப் பறிமுதல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்