19 கிலோ நகை திருடிய வழக்கில் கைதான கோபாலகிருஷ்ணனுக்கு மீண்டும் போலீஸ் காவல்: சென்னை போலீஸார் விசாரணை

புதுக்கோட்டை - குளத்தூர் வங்கி யில் 19 கிலோ நகை திருடப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள கோபால கிருஷ்ணனை, வேறொரு வழக்கு தொடர்பாக காவலில் எடுத்து, சென்னை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குளத்தூர் சிட்டி யூனியன்வங்கி யில் 2014 நவம்பர் 30-ம் தேதி 19 கிலோ நகை திருடப்பட்ட வழக்கில் கோபாலகிருஷ்ணன், அழகிரிசாமி , ஆனந்தகுமார் ஆகிய மூவரையும் கீரனூர் போலீஸார் கைது செய்தனர்.இவர்களிடம் இருந்து முதலில் 5 கிலோ தங்கம், ரூ.1.5 கோடி ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் 100 பவுன் நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், சென்னை செம்பி யம் பகுதியில் கடந்த 2013-ல் 3 கிலோ நகை திருடுபோயுள் ளது. இந்த 2 சம்பவமும் ஒரே மாதிரி இருப்பதால், செம்பியம் சம்பவத்திலும் கோபாலகிருஷ் ணனுக்கு தொடர்பிருக்கலாம் என செம்பியம் போலீஸார் கருதினார். எனவே திருச்சி சிறையில் இருந்த கோபாலகிருஷ்ணனை கடந்த 16-ம் தேதி முதல் போலீஸ் காவலில் எடுத்தனர்.

கடந்த 2013-14ம் ஆண்டுகளில் கீரனூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் கோபாலகிருஷ்ணன் பெயரில் நகை அடகு வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரிக்கின்ற னர். மேலும் 20-ம்தேதி வரை விசாரணை நடைபெற உள்ள தாகவும், அப்போது முழு விவரம் தெரியவரும் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்