பிளஸ் 2 பொதுத் தேர்வில் தமிழை முதல் மொழிப்பாடமாக எடுத்து மாநில அளவில் முதல் இடத்தைப் பிடித்த 21 மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா கடந்த ஜூன் 29-ம் தேதி தலைமைச் செயலகத்தில் ரூ.10.5 லட்சத் துக்கான காசோலைகளை யும் பாராட்டுச் சான்றிதழ் களையும் வழங்கி கவுர வித்தார்.
இந்நிலையில், பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் 2-ம், 3-ம் இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கும் இதேபோல், எஸ்எஸ்எல்சி தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக் கும் தமிழக அரசு சார்பில் பரிசு கள் மற்றும் பாராட்டுச் சான் றிதழ்கள் வழங்கும் விழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள சென்னை கிறிஸ்தவக் கல்லூரி மேல் நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.
பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வில் 2-ம் இடம் பெற்ற 26 மாணவ-மாணவிகளுக்கும், 3-ம் இடத்தைப் பிடித்த 23 பேருக் கும், இதேபோல், 10-ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற 51 பேருக்கும், 2-ம் இடம் பிடித்த 194 பேருக்கும், 3-ம் இடம் பெற்ற 694 பேருக் கும் (மொத்தம் 988 பேர்) ரூ.1 கோடியே 68 லட்சம் பரிசும், பாராட்டுச் சான்றிதழ் களும் வழங்கப்பட்டன. அவற்றை அமைச்சர்கள் எடப்பாடி கே.பழனிச்சாமி, பா.வளர் மதி, என்.சுப்பிரமணியன், கே.சி.வீரமணி, எஸ்.அப்துல் ரகீம் ஆகியோர் வழங்கினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago