நடிகர் விஷால் குழுவினர் மிரட்டுவதாக நாமக்கல் நாடக நடிகர் சங்கத்தினர் புகார்

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் விஷால் குழுவைச் சேர்ந்தவர்கள் நாமக்கல்லுக்கு பிரச்சாரத்துக்கு வர உள்ளனர். அவர்களுக்கே நீங்கள் வாக்களிக்க வேண்டும் என ஒரு கும்பல் மிரட்டியதாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், நாடக நடிகர் சங்க தலைவர் ஆட்டோ ராஜா புகார் அளித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாமக்கல் மாவட்ட நாடக நடிகர் சங்க தலைவராகவும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினராகவும் உள்ளேன். நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் விஷால் தரப்பில் இருந்து என்னை போனில் தொடர்பு கொண்டு, அவர்கள் தரப்புக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டனர்.

இச்சூழலில் 15-ம் தேதி எனது வீட்டுக்கு காரில் வந்த ஒரு கும்பல், நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் விஷால் குழுவைச் சேர்ந்தவர்கள் நாமக்கல்லுக்கு பிரச்சாரத்துக்கு வர உள்ளனர். அவர்களுக்கே நீங்கள் வாக்களிக்க வேண்டும். இல்லையெனில் உங்களை கடத்திச் சென்று விடுவோம் என மிரட்டினர். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளேன் என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்