கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவ மழையின்போது தமிழ்நாட்டில் அதிக மழை பெறுவது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள். இந்தப் பகுதியில் ஜூன் மாத ஆரம்பத்தில் கன மழை பெய்து கொண்டிருந்தது. அதன் பிறகு மழை குறைந்து அங்கிருந்து வெப்பக் காற்று வீசத் தொடங்கியது. அதனால் தமிழ்நாடு முழுவதும் வெப்பம் அதிகரித்தது.
தற்போது மேற்கு மாவட்டங்களில் மீண்டும் கன மழை பெய்யும் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஜூன் 1-ம் தேதி முதல் இது வரை 66.6 மி.மீ மழை பெய்துள்ளது. இது சராசரி மழையை விட 6 சதவீதம் குறைவாகும். எனினும் கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஜூன், ஜூலை மாதங்களில் சராசரியை விட அதிகமான மழை பெய்துள்ளது. கோவையில் 112.5 மி.மீ., நீலகிரியில் 318.5 மி.மீ., தேனியில் 119.9 மி.மீ. மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் வெயில் குறையும் என்று எதிர்பார்த்த நிலையில் நேற்றும் பல நகரங்களில் வெயில் அதிகமாகவே காணப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
27 mins ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago