சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்கு ஆக.15 வரை விண்ணப்பிக்கலாம்: காலக்கெடு நீட்டிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற வேண்டி விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ் நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி களில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர், பார்சி, ஜெயின் மதங்களைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2015-16-ம் ஆண்டு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற் கான புதிய மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்களை தாங்கள் பயிலும் பள்ளிகளில் ஜூலை 15-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஏற்கெனவே அறிவிக்கப் பட்டிருந்தது.

அது தற்போது ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவல ரிடம் ஜூலை 25-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. அது தற் போது ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று 9 முதல் 10-ம் வகுப்பு மாணவ, மாணவியர் www.scholerships.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன் லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டிய காலக்கெடு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட் டுள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்