தயாநிதி மாறனின் முன்ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு

பிஎஸ்என்எல் இணைப்பகத்தை சட்டவிரோதமாக வைத்திருந்த தாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தயாநிதி மாறனை சிபிஐ கைது செய்யாமல் இருக்க அவருக்கு 6 வாரங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால முன்ஜாமீன் வழங்கியிருந்தது.

இதற்கிடையே, தயாநிதி மாறனிடம் ஜூலை முதல் வாரத் தில் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், விசார ணைக்கு ஒத்துழைக்க வில்லை என்று கூறி தயாநிதி மாறனுக்கு அளிக்கப்பட்ட இடைக்கால முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி கடந்த வாரம் உயர் நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி சுப்பையா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தயாநிதி மாறன் தரப்பில் யாரும் ஆஜராகாததால் வழக்கு விசாரணையை ஜூலை 27-ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்