போளூர் அருகே மேல்சோழங்குப்பம் கிராமத்தில் சிறுவனை மது குடிக்க வைத்த மேலும் ஒருவர் கைது

போளூர் அருகே 4 வயது சிறுவனுக்கு மதுபானம் ஊற்றிக் கொடுத்து குடிக்க வைத்த சம்பவத் தில் மேலும் ஒரு இளைஞரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்துள்ள மேல் சோழங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆனந்தன், ஈஸ்வரி. இவர்கள் இருவரும் சென்னையில் கட்டுமானத் தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களது 4 வயது மகன், ஈஸ்வரியின் பெற்றோருடன் இருந்தார்.

அந்த சிறுவன் மதுபானம் குடிப்பது போலவும் அதை இளைஞர்கள் சிலர் ரசிப்பது போன்ற வாட்ஸ்அப் வீடியோ காட்சிகள் வெளியானது. இது தொடர்பாக கடலாடி காவல் ஆய்வாளர் ராஜசேகர் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.

அதில், சிறுவனுக்கு மதுபானம் ஊற்றி கொடுத்ததாக மேல்சோழங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை, பிரேம்குமார் ஆகியோர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். இவர்கள் கொடுத்த தகவலில், சிறுவனுக்கு மதுபானம் ஊற்றிக் கொடுத்தது அவரது தாய்மாமன் முருகன் 23) எனத் தெரியவந்தது. அவர், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மணிகண்டன்(22) என்ற இளைஞரை போலீஸார் நேற்று கைது செய்தனர். இதுகுறித்து, போலீஸார் கூறியதாவது:

பாட்டி வீட்டில் வளர்ந்த சிறுவன் தாய் மாமன் முருகனுடன் எப்போதும் இருசக்கர வாகனத் தில் சுற்றுவான். முருகன் நண்பர் களுடன் மது அருந்தும்போது சிறுவனும் உடன் இருந்துள்ளார். மதுபானம் குடிக்கும் நேரத்தில் சிறுவனுக்கும் சிறிதளவு மதுபானம் ஊற்றிக் கொடுத்து பழக்கப்படுத்தியுள்ளார்.

சம்பவம் நடந்த அன்று, கிரிக் கெட் விளையாடிவிட்டு நண்பர் களுடன் முருகன் மதுபானம் அருந்தியுள்ளார். அந்த நேரத்தில் சிறுவனுக்கு மதுபானம் ஊற்றிக் கொடுத்து வீடியோ எடுத்து ரசித்துள்ளனர்.

இது தொடர்பான வழக்கில் மேலும் சிலரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்