கோவையில் வரும் 12-ம் தேதி நடக்கவுள்ள பாமக அரசியல் மாநாட்டில் தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பாமக சார்பில், ‘2016 ஆட்சி மாற்றத்துக்கான அரசியல் மாநாடு’ சேலத்தில் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி நடந்தது. அதில் அன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களுக்கும் அன்புமணி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தருமபுரி, காஞ்சிபுரம், வேலூர், கோவில் பட்டி உள்ளிட்ட 6 இடங்களில் அவரது தலைமையில் ஆர்ப் பாட்டங்கள் நடத்தப்பட்டன.
மேலும் பாமகவின் சோழ மண்டல மாநாடு, கங்கைகொண்ட சோழபுரத்தில் கடந்த மே 17-ம் தேதி நடந்தது. இந்நிலையில், பாமக கொங்கு மண்டல மாநாடு கோவை கொடிசியா வளாகம் அருகே வரும் 12-ம் தேதி நடக்கிறது. இதற்கு முன்பு நடந்த கூட்டங்கள் பாமகவின் செல்வாக்கை உணர்த்தியுள்ளது. தற்போது கோவையில் நடக்க வுள்ள அரசியல் மாநாட்டில் திரளாக பங்கேற்று பாட்டாளி சொந்தங்கள் சிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago