சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கத்தார் நாட்டில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த பெங்களூருவை சேர்ந்த பயணி கைது செய்யப்பட்டார்.
கத்தார் நாட்டு தலைநகர் தோகாவில் இருந்து விமானம் ஒன்று, சென்னை விமான நிலையத்துக்கு நேற்று அதிகாலை 3 மணிக்கு வந்தது. விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வெளியே அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது கத்தார் நாட்டுக்கு சுற்றுலா விசாவில் சென்றுவிட்டு வந்த கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சிராஜ் (35) என்பவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரையும், அவரது உடைமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். சூட்கேஸ் மற்றும் உள்ளாடைகளில் தலா 100 கிராம் எடையுள்ள 32 தங்க கட்டிகளை மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள 3 கிலோ 200 கிராம் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து சிராஜை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago