பம்மல், பொழிச்சலூரில் இருந்து கோயம்பேடுக்கு நேரடி பேருந்து வசதி தேவை: உங்கள் குரலில் பொதுமக்கள் கோரிக்கை

பம்மல், பொழிச்சலூரில் இருந்து கோயம்பேடுக்கு நேரடி பேருந்து வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக ‘தி இந்து’ உங்கள் குரலில் வாசகர் ஏ.பி.ஆறுமுகராஜ் கூறியதாவது:

பம்மல், பொழிச்சலூர், அனகாபுத் தூர் மற்றும் சங்கர் நகர் பகுதிகளில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மக்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று பணியாற்றி வருகின்றனர். ஆனால், போதிய அளவில் பேருந்து வசதிகள் இல்லாமல் அவதிப்படுகின்றனர். குறிப்பாக கோயம்பேடுக்கு தின மும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர். இந்தப் பகுதி களில் இருந்து கோயம்பேடுக்கு நேரடி பேருந்து வசதி இல்லை.

இங்குள்ள மக்கள் கோயம் பேடுக்கு செல்ல வேண்டும் என்றால் பல்லாவரம் வந்து, அங்கிருந்து வேறொரு பேருந்தில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. கோயம்பேடுக்கு நேரடி பேருந்து வசதி செய்து கொடுக்குமாறு மாநகர போக்குவரத்துக் கழகத் துக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மக்களின் நலன் கருதி நேரடி பேருந்து வசதி செய்துதர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘பொது மக்களின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும். நேரடி பேருந்து தேவை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்