காரைக்காலில் நேற்று நடைபெற்ற மாங்கனித் திருவிழாவில், வீதியுலா வந்த சிவபெருமான் மீது பக்தர்கள் மாம்பழங்களை வீசி வழிபடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காரைக்கால் அம்மையார் கோயிலில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா நடை பெறும். இந்த விழாவில் நேற்று அடியார் கோலத்தில், சிவபெருமான் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடை பெற்றது. அப்போது, ஆயிரக்கணக் கான பக்தர்கள், தங்களின் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், இறைவனுக்கு அளிக் கும்விதமாக மாங்கனிகளை வீசி வழிபட்டனர். அவ்வாறு இறை வனை நோக்கி வீசப்படும் மாங்கனிகளை உண்டால் திருமணம் மற்றும் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம் என்பதால், ஏராளமான பக்தர்கள் போட்டிபோட்டு மாம்பழங்களைப் பிடித்து, பிரசாதமாக வீட்டுக்கு எடுத்துச் சென்றனர்.
சிவபெருமான் பிச்சாடன மூர்த்தியாக வந்து, காரைக்கால் அம்மையார் இல்லத்தில் உணவ ருந்திய நிகழ்ச்சியைக் குறிக்கும் வகையில் விழா நடைபெற்றது.
இவ்விழாவையொட்டி நேற்று காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிக ளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago