தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் கொள்ளை கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததாக இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் ஆகியோர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கீழகாமியா புரத்திலுள்ள மணல் குவாரியில் பாண்டியன் என்பவர் மேலாளராக பணிபுரிந்துவந்தார். கடந்த செப்டம் பரில் குவாரியிலிருந்து ரூ.26 லட் சத்தை காரில் அவர் எடுத்துச் சென்று கொண்டிருந்தபோது ஒரு கும்பல் அவரை வழிமறித்து ரூ. 26 லட்சத் தையும் கொள்ளையடித்து தப்பியது.இது தொடர்பாக எட்டயபுரம் போலீ ஸில் பாண்டியன் புகார் அளித்தார்.
இந்நிலையில் அப்போது எட்டய புரம் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ண னுக்கும், போலீஸ்காரராக பணிபுரிந்த சத்தியமூர்த்தி என்பவருக் கும் கைதான கொள்ளை கும்பலுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது.கொள்ளை கும்பலுடன் இவர்கள் இருவருக்கும் தொடர்பு இருந்தது விசாரணையில் உறுதியானதை அடுத்து, ராமகிருஷ் ணனை திருநெல்வேலி சரக டிஐஜி முருகன் நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். இதுபோல் போலீஸ்காரர் சத்தியமூர்த்தியை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அஸ்வின் கோட்னீஸ் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago