மதுரையில் கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி வரும் சட்ட ஆணையர் சகாயத்தின் விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் ஆஜராகவில்லை.
கிரானைட் முறைகேடு தொடர் பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்களைப் பெறு வதற்காக மதுரை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியனை நேற்று ஆஜராகுமாறு சகாயம் சம்மன் அனுப்பியிருந்தார். எனவே ஆட்சியர் ஆஜராவார் என பகல் 12 மணி வரை சகாயம் உள்ளிட்ட அலுவலர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
கடலூர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் நேற்று முன்தினம் ஆஜராவதற்காக ஆட்சியர் 3 நாள் விடுமுறையில் சென்றார். ஆட்சியர் விடுமுறையில் இருப்பதாக சகாயம் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இது குறித்து சகாயம் ஆய்வுக் குழு அலுவலர்கள் கூறியதாவது: ஆட்சியர் இல.சுப்பிரமணியன் சகாயத்துக்கு கடிதம் அனுப்பி யுள்ளார். அவர் கேட்ட தகவல்களை அறிக்கையாக தயாரித்து வருவ தாகவும், இதை விரைவில் தாக்கல் செய்வதாகவும், இதற்கு கால அவகாசம் தேவை எனவும் கேட்டுக் கொண்டுள்ளார் என்று அவர்கள் கூறினர். இதனிடையே மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரியை இன்று (ஜுலை 8) ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
15 hours ago