பணிபுரியும் பெண்களுக்கான அரசு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

By செய்திப்பிரிவு

பணிபுரியும் பெண்களுக்காக அரசு நடத்தும் விடுதிகளில் சேர விரும்புவோர் விண்ணப்பிக் கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி அறிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

அரசு அலுவலகங்கள், நிறு வனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரியும் மகளிருக்காக மூன்று அரசு விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் மூலம் நடத்தப்படும் இந்த விடுதி களில் மாத ஊதியம் ரூ.25 ஆயிரத்துக்குள் பெறும் மகளிர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

இந்த விடுதிகளில் சேர விரும்புவோர் சம்பந்தப்பட்ட விடுதி கண்காணிப்பாளரை தொடர்பு கொள்ளலாம். பெரம்பூர், மூலக்கடை, மடுமாநகரில் சின்ன குழந்தை பிரதான சாலையில் உள்ள மகளிர் விடுதியில் சேர 80987 56782 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வியாசர்பாடி, பாலகிருஷ்ணன் சாலையில் உள்ள விடுதியில் சேர விரும்புவோர் 98402 79866 என்ற எண்ணில் பேசலாம். சேலையூர் சாந்தாநகர் 2வது தெருவில் உள்ள மகளிர் விடுதியில் சேர விரும்புபவர்கள் 98406 04968 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பேசலாம்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

5 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்