சென்னை சேலையூர் சீனிவாசா நகரில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு வெளிமாநில மாணவர்கள் ஏராளமானவர்கள் படிக்கின்றனர். பிஹாரைச் சேர்ந்த சந்தீப்குமார் (23), பிரேம் (23), மிதுன்ஜா (24) ஆகியோரும் இங்கு படிக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். அப்போது பிஹாரை சேர்ந்த மணிஷ்குமார் (24), சந்தீப்குமார் ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலையில் சேலையூர் லட்சுமி நகர் பகுதியில் ஒரு டீ கடையில் சந்தீப்குமார், பிரேம், மிதுன்ஜா ஆகியோர் டீ குடித்து கொண்டு இருந்தனர். அப்போது மணிஷ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் காரில் வந்து சந்தீப்குமாரை சரமாரியாக தாக்கினர். ஒரு கம்பியை வைத்து சந்தீப்குமாரின் தலையில் அடித்தனர். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. தப்பியோடிய 4 பேரையும் சேலையூர் போலீஸார் தேடிவருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago