ஹெல்மெட் கட்டாயம் என்ற அரசு உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட 2 மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகி யோரைக் கொண்ட முதன்மை அமர்வு, விசாரித்து பிறப்பித்த உத்தரவு:
மோட்டார் வாகனச் சட்டத் தின்படி இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல் மெட் அணிவது கட்டாயம். ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் விபத்துகளைக் கருத் தில் கொண்டு தனி நீதிபதி இதற் கான உத்தரவைப் பிறப்பித் துள்ளார்.
மோட்டார் வாகன சட்டப் படி ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற விதி முறையை இதுவரை நடை முறைப்படுத்தாமல் இருப்பதே தாமதமான செயலாகும். இந்நிலையில், மனுதாரர்கள் விளம்பரத்துக் காகவே மனு தாக்கல் செய்திருப்பதால் அவை தள்ளுபடி செய்யப் படுகின்றன. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago