மாதவரத்தில் வேலைக்காரப் பெண்ணை கொடுமைப்படுத்தியதாக டாக்டர் மனைவி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாதவரம் பால் பண்ணை சாலையில் வசிப்பவர் ராஜ்குமார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக உள்ளார். இவரது மனைவி நஸ்ரியா. இவர்களது வீட்டில் தஞ்சாவூரை சேர்ந்த ஜாய்ஸ் என்ற பெண் கடந்த சில ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட குழந்தை தொழிலாளர் ஒழிப்பு அதிகாரிகளுக்கு ராஜ் குமார் வீட்டில் வேலைக்காரப் பெண் அடித்து சித்ரவதை செய்யப் படுவதாக புகார்கள் வந்தன. அதைத் தொடர்ந்து குழந்தை தொழிலாளர் ஒழிப்பு அதிகாரி வளர்மதி, வட்டாட்சியர் பவானி, மாதவரம் கிராம நிர்வாக அலுவலர் எஸ்தர் ஆகியோர் ராஜ்குமார் வீட்டுக்கு சென்று வேலைக்காரப் பெண் ஜாய்ஸிடம் விசாரணை நடத்தினர். அவரது உடலில் அடித்து சித்ரவதை செய்யப்பட்டதற்கான காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
மதுரவாயலில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து மாதவரம் போலீஸில் புகாரும் கொடுக்கப் பட்டது. இந்த புகாரின்பேரில் நஸ்ரியா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago