நிராகரிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி: ஆட்சியரிடம் தாய் மனு அளித்ததால் தீர்வு

உயரத்தை காரணம்காட்டி மகனை பள்ளியில் சேர்க்க மறுத்ததால் ஆட்சியரிடம் தாய் மனு அளித்தார்.

மதுரை மேலக்கால் பகுதியைச் சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மனைவி முத்துமாரி. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அழகர்சாமி இறந்து விட்டார். இவர்களது மகன் தினேஷ்குமார் (16) பிறவியிலேயே வளர்ச்சிக் குறைபாடு உள்ளவர்.

மூன்றரை அடி உயரம் மட்டுமே உள்ள தினேஷ்குமார் இப்பகுதி கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பில் 368 மதிப்பெண் பெற்றார். பிளஸ் 1 சேர விண்ணப்பித்தபோது, போதிய வளர்ச்சி இல்லை என்று கூறி, மறுத்துவிட்டனர்.

இதனால் முத்துமாரி தனது மகனுடன் ஆட்சியர் இல.சுப்பிரமணியனிடம் நேற்று மனு அளித்தார். மகனை பள்ளியில் சேர்க்க மறுப்பதால், ஏதாவது வேலை வழங்கும்படி கேட்டார். இதையடுத்து தினேஷ்குமாரை உடனே பள்ளியில் சேர்க்க, கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் உரிய உத்தரவை பிறப்பித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்