நீலகிரி மாவட்டத்தில் 2 நாள் போராட்டத்துக்குப் பின் இடம் மாறுகிறது மதுக்கடை: பள்ளிக்கு திரும்பினர் மாணவர்கள்

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, நீலகிரி மாவட்டத்தில் பர்லியாறு பகுதியில் செயல்பட்ட மதுக்கடை மூடப்பட்டது. இந்த கடை கடந்த 2013-ம் ஆண்டு குன்னூர் அருகேயுள்ள பெட்டட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றியப் பள்ளி அருகில் மாற்றப்பட்டது.

பள்ளி அருகில் மதுக்கடை திறக்கப்பட்டதை எதிர்த்து மாண வர்களுடன் சேர்ந்து பெற்றோர் சாலை மறியல் உள்ளிட்ட போராட் டங்களில் ஈடுபட்டு, மதுக்கடையை அகற்றாவிட்டால், பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்புவதில்லை என அறிவித்தனர்.

அதன்படியே, பள்ளி திறக்கப் பட்ட ஜூன் 1-ம் தேதி பெட்டட்டி ஊராட்சி நிடுநிலைப் பள்ளியில் படிக்கும் 68 மாணவர்களின் பெற் றோரும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. அனைத்து பெற் றோரும் குழந்தைகளின் மாற்றுச் சான்றிதழுக்கு விண்ணப்பித்தனர்.

இதனால், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி கணேசமூர்த்தி, பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கலால் உதவி ஆணையர் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் ஆலோசித்தனர்.

குன்னூர் கோட்டாட்சியர் பழனி குமார், பெற்றோரிடம் கூறும்போது, ‘மதுக்கடையை கிராமத்துக்கு வெளியே மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த நடைமுறையை செயல்படுத்த 10 நாட்களாகும். குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்புங்கள். பள்ளியினுள் வெளியாட்கள் நுழையாமல் இருக்க போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள்’ என்றார்.

அதிகாரிகளின் நடவடிக்கை யால் திருப்தியடைந்த பெற்றோர் நேற்று மாணவர்களை பள்ளிக்கு அனுப்பினர். பள்ளி நேற்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்