திருச்சி விமான நிலைய கழிவறையில் நேற்று முன்தினம் இரவு, பேப்பரில் சுற்றப்பட்ட நிலையில் ஒன்றரை கிலோ தங்கக் கட்டிகள் கண்டெடுக்கப்பட்டன.
மலேசியா, சிங்கப்பூர், கொழும்பு ஆகிய இடங்களிலி ருந்து விமானங்கள் நேற்று முன்தினம் இரவு திருச்சி விமான நிலையத் துக்கு வந்தன. இந்த விமானங்களில் இருந்து வந்திறங்கிய பயணிகளை வழக்கம்போல வான் நுண்ணறிவு மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்து வெளியே அனுப்பினர்.
பயணிகள் அனைவரும் வெளியே சென்ற பின் விமான நிலைய துப்புரவுப் பணியாளர்கள், கழிவறைப் பகுதிகளை சுத்தம் செய்யச் சென்றபோது, அங்கு பேப்பரில் சுற்றப்பட்ட நிலையில் ஒரு பார்சல் கிடந்துள்ளது. இதுகுறித்து விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் சென்று பார்சலை பிரித்துப் பார்த்தபோது, அதில் 100 கிராம் எடையுள்ள 15 தங்கக் கட்டிகள் இருந்தது. இதையடுத்து தங்கக் கட்டிகளை கைப்பற்றிய சுங்கத் துறையினர், விமான நிலைய கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் ஆய்வு செய்துவரு கின்றனர். இவற்றின் மதிப்பு ரூ.40 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
39 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago