மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: கோவை தனியார் நிறுவன மேலாளர் கைது

திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி, கல்லூரி மாணவியை கர்ப்பம் ஆக்கியவரை போலீஸார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:

கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (31), தனியார் நிறுவன மேலாளர். இவருக்கு திருமணமாகி 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவி பிரிந்த நிலையில், ஏற்கெனவே திருமணமாகி தனியாக வசித்து வந்த பெண்ணை, மறுமணம் செய்துள்ளார். அந்த பெண்ணுக்கும் 3 வயதில் மகன் உள்ளார்.

இந்நிலையில், வீட்டின் அருகில் வசிக்கும் கல்லூரி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அவருடன் நெருங்கிப் பழகியுள்ளார் ஜெயபிரகாஷ். மகளின் நடவடிக்கையில் மாற்றம் தெரியவே, அவரது பெற்றோர் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது, தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஜெயபிரகாஷ் நெருங்கிப் பழகியதையும், தற்போது கர்ப்பமாக இருப்பது குறித்தும், அந்த மாணவி தெரிவித்துள்ளார். இதையடுத்து, துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண்ணின் பெற்றோர், ஜெயபிரகாஷ் மீது நேற்று முன்தினம் புகார் அளித்தனர். இதன்பேரில், ஜெயபிரகாஷை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்