மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்: சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு

சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் கூறியதாவது:

சென்னை மக்களின் பெரும் எதிர் பார்ப்பான சென்னை மெட்ரோ ரயில் சேவை கோயம்பேடு - ஆலந்தூர் இடையே நேற்று தொடங்கப்பட்டது. அதனை கொண்டாடும் விதமாக சென்னை நகர அஞ்சல் மண்டலம் சார்பில் சிறப்பு அஞ்சல் உறை, மற்றும் பயண உறை நேற்று வெளியிடப்பட்டது.

இந்த அஞ்சல் உறை வெளியீட்டு விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள சென்னை நகர மண்டல அஞ்சல் அலு வலகத்தின் அஞ்சல்தலை பிரிவில் நேற்று மாலை நடந்தது. ‘மெட்ரோ ரயில் தொடக்க ஓட்டம்’ என்னும் அந்த அஞ்சல் உறையை நான் வெளியிட்டேன். அதே போல, கோயம்பேடு மற்றும் ஆலந்தூர் இடையே மெட்ரோல் ரயில் இயக்கப்படுவதை குறிக்கிற விதமாக கோயம்பேடு மற்றும் பரங்கிமலை அஞ்சல் நிலையங்களின் முத்திரையிடப் பட்ட சிறப்பு பயண உறைகள் முதல் மெட்ரோ ரயிலின் மூலம் இரு அஞ்சல் நிலையங்களுக்கும் கொண்டு போய் சேர்க்கப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்