விமான நிலையத்தில் 3 கிலோ தங்கம் பறிமுதல்

By செய்திப்பிரிவு

சென்னை விமான நிலையத்தில் 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. குவைத்தில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த கேரள இளைஞர் கைது செய்யப்பட்டார்.

குவைத்தில் இருந்து கோவாவுக்கு வந்த சர்வதேச விமானம், அங்கிருந்து உள்நாட்டு விமானமாக சென்னைக்கு நேற்று வந்தது. இந்த விமானத்தில் 100-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வந்தனர். விமானத்தில் இருந்து இறங்கி வந்த பயணிகளை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வெளியே அனுப்பிக் கொண்டிருந் தனர்.

அப்போது கேரளத்தைச் சேர்ந்த அப்துல் காதர் (31) என்பவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதில் 3 கிலோ எடை கொண்ட தங்கக் கட்டிகள் பொட்டலமாக கட்டி எடுத்துவந்தது தெரியவந்தது.

இதையடுத்து தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மேலும் சிலருக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்