மாவோயிஸ்ட் கோஷம் எழுப்பியதாக கைது செய்யப்பட்ட இருவருக்கு நீதிமன்றக் காவல்

By செய்திப்பிரிவு

கோவையில் கியூ பிரிவு அலுவலகம் முன்பு மாவோயிஸ்ட் கோஷம் எழுப்பியதாகக் கைது செய்யப்பட்ட இருவர் 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: கோவை கருமத்தம்பட்டி பகுதியில் மாவோயிஸ்ட் இயக் கத்தைச் சேர்ந்த 5 பேர் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டனர். அவர் களை, பீளமேடு ஹாட்கோ காலனியில் உள்ள கியூ பிரிவு அலுவலகத்தில் விசாரித்துக் கொண்டிருந்தபோது, மோட்டார் பைக்கில் வந்த இருவர் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.

அவர்களை போலீஸார் பிடிக்க முயற்சித்தபோது, தப்பிவிட்டனர். இது குறித்து கியூ பிரிவைச் சேர்ந்த தலைமைக் காவலர், பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதுதொடர்பாக அடையாளம் தெரியாத இருவர் மீது ஆபாச வார்த்தைகளால் திட்டுதல், அரசு ஊழியரை வேலைபார்க்க விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து பீளமேடு போலீஸார் நடத்திய விசாரணையில், வெள்ளலூரைச் சேர்ந்த நாகமாணிக்கம் (20), மாசானமுத்து (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் நேற்று முன்தினம் பிடிபட்டனர். அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்குமாறு மாவட்ட முதன்மை நீதிபதி பொங்கியப்பன் நேற்று உத்தர விட்டார். இருவரும் பொள்ளாச்சி இளை ஞர் சீர்திருத்தப் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அடைக்கப்பட் டனர். தொடர்ந்து, மாவோயிஸ்ட் இயக்க ஆதரவாளர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

8 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்