சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் குறித்த புகாரை பொதுமக்கள் இங்கு தெரிவிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரான மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே மே மாதம் 26-ம் தேதி முதல் ஜூலை 2-ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்த புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க ரிப்பன் மாளிகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப் பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் புகாரை கட்டணமில்லா தொலைபேசி எண். 1800- 4257012 ல் தெரிவிக்கலாம். இந்திய தேர்தல் ஆணையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்.1950 என்ற எண்ணிலும் பொதுமக்கள் தங்கள் புகாரை பதிவு செய்யலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் தேர்தல் செலவினங்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் 84 பறக்கும் படைகள், 6 நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் வீடியோ கண்காணிப்புக் குழு ஆகியவைகள் அமைக்கப்பட்டுள்ளது.
ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தேர்தல் நடத்தை விதிகள் சம்பந்தமாகவும், அனுமதிக்கப்பட்ட செலவின தொகை குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago