உயிருக்கு போராடியவருக்கு உதவிய ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு

By செய்திப்பிரிவு

மயிலாடுதுறை காந்திஜிசாலையில் ஜூன் 20-ம் தேதி அரங்கக்குடியைச் சேர்ந்த நேரு(50) தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது லாரி ஒன்று அவர் மீது மோதியதில் படுகாயமடைந்து, சாலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நேருவை அந்த வழியாகச் சென்ற மயிலாடுதுறை கூறைநாடு கவரத் தெரு ராஜவேலு மகன் சித்தார்த்தன் தனது ஆட்டோவில் ஏற்றி, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேரு இறந்தார்.

உடல் பாகங்கள் சிதைந்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவரை துணிச்சலாக செயல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ஆட்டோ ஓட்டுநரின் செயலை கேள்விப்பட்ட மயிலாடுதுறை உதவி காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் கடிமணி ஆட்டோ ஓட்டுநர் சித்தார்த்தனை நேற்று தனது அலுவலகத்துக்கு அழைத்து சால்வை அணிவித்து, ரூ.500 ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினார்.

ஆட்டோ ஓட்டுநர் சித்தார்த்தனை பாராட்டுகிறார் மயிலாடுதுறை உதவி காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் கடிமணி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்