திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் ஆலத்தூர் ஊராட்சி செட்டிபுதூரில் வசித்து வருபவர் நாகராஜ் (45), கூலித் தொழிலாளி. இவரது மகள் திவ்யா(13). ஆலத்தூர் நடுநிலைப் பள்ளியில், 7-ம் வகுப்பு முடித்துவிட்டு, பள்ளி தொடங்கும் முதல் நாளான நேற்று 8-ம் வகுப்பு செல்வதற்கு, வீட்டில் ஆர்வத்துடன் சீருடை அணிந்து புறப்பட்டுக் கொண்டிருந்தார்.
சில தினங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக அப் பகுதியில் உள்ள வீடுகளின் மண் சுவர்கள் நனைந்து இருந்தன. இந்நிலையில் நேற்று திடீரென பக்கத்து வீட்டுச் சுவர் இடிந்து திவ்யா மீது விழுந்தது. இடிபாடு களிலிருந்து திவ்யாவை பொது மக்கள் மீட்டபோது, அவர் இறந்து கிடந்தார். அவிநாசி அரசு மருத்துவ மனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago