ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் மாணவ-மாணவியர் விடுதி களில் சேருவதற்கு விருப்பம் உள்ள மாணவ மாணவிகள் விண் ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத் தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கட்டுப்பாட்டின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணவ- மாணவியர் விடுதிகள் இயங்கி வருகின்றன. இந்த விடுதிகளில், 2015-2016 கல்வியாண்டுக்கான மாணவ-மாணவியர் சேர்க்கை நடைபெற உள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ- மாணவியர் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்.
பெற்றோரின் ஆண்டு வரு மானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விடுதிக்கும் மாணவர்கள் வசிக்கும் இடத்துக் கும் குறைந்தபட்சம் 5 கி.மீ., தூரம் இருக்க வேண்டும். இந்த விதி மாணவியருக்குப் பொருந்தாது.
பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவியர்கள் சேரலாம். அரசு கல்லூரி விடுதிகளில் பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவ- மாணவியர் கள் சேரலாம். இதுதவிர, ஒரு விடுதிக்கு தலா 5 நபர்கள் வீதம் அனைத்து விடுதிகளிலும் இலங்கை தமிழர் களின் குழந்தைகள் சேர்த்துக் கொள்ளப்படுவர்.
அரசு பள்ளி விடுதிகளில் சேர விரும்புவோர், வரும் 30-ம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதி களில் சேர விரும்புவோர் ஜூலை 20-ம் தேதிக்குள்ளும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் நல அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் களிடம் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரி வித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago