இட்டார்சி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மேலும் 11 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
மத்தியப்பிரதேச மாநிலம் இட்டார்சி ரயில் நிலையத்தில் கடந்த 17-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதால், அந்த வழியாக செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பல ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்படுகின்றன. இந்நிலையில், மேலும் 11 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
பாட்னாவில் இருந்து சென்னை சென்ட்ரல் வழியாக பெங்களூருக்கு இயக்கப்படும் சங்கமித்ரா விரைவு ரயில் (12296), கயாவில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில் (12389), புதுடெல்லியில் இருந்து சென்னை எழும்பூர் வழியாக புதுச்சேரிக்கு இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில் (22404) பெங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வழியாக பாட்னாவுக்கு இயக்கப்படும் சங்கமித்ரா விரைவு ரயில் (12295) ஆகியவை இன்று (28-ம் தேதி) ரத்து செய்யப்படுகிறது.
29-ம் தேதி (நாளை)
சென்னை சென்ட்ரலில் இருந்து புதுடெல்லிக்கு 29-ம் தேதி (நாளை) புறப்படும் ஜி.டி.விரைவு ரயில் (12615) ரத்து செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லியில் இருந்து 29-ம் தேதி புறப்படும் ஜி.டி. விரைவு ரயில் (12616), சாப்ராவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு 29-ம் தேதி புறப்படும் கங்கா, காவேரி வாரம் இருமுறை விரைவு ரயில் (12670), லக்னோவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வரும் விரைவு ரயில் (16094) ஆகியவையும் 29-ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஜம்முதாவியில் இருந்து கன்னியாக்குமரிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் (16318), இந்தூர் – திருவனந்தபுரம் விரைவு ரயில் (22645), யஸ்வந்த்பூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வழியாக பாடலிபுத்ராவுக்கு வாரம் இருமுறை இயக்கப்படும் விரைவு ரயில் (22352) ஆகியவையும் 29-ம் தேதி ரத்து செய்யப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago