திருக்கோவிலூரில் டிரான்ஸ் பார்மர் வெடித்து தீப்பற்றியது. இதில், மின் வாரிய ஊழியர்கள் 5 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
திருக்கோவிலூர் சந்தை பேட்டை துணை மின் நிலையத் தில் இருந்த டிரான்ஸ்பார்மர் நேற்று அதிகாலை வெடித்தது. இதையடுத்து, அதைச் சீரமைப் பதற்காக விழுப்புரத் திலிருந்து 5 பேர் கொண்ட மின் வாரிய குழுவினர் நேற்று திருக்கோவிலூர் வந்தனர்.
அவர்கள், டிரான்ஸ்பார்மரை சீரமைத்த நிலையில் அந்த மின் மாற்றி வெடித்து தீப்பற்றியது. இதில், வாரிய ஒப்பந்த வாகன மும் தீப்பற்றி நாசமானது.
மேலும், ஒப்பந்த வாகன ஓட்டுநரான விழுப்புரத்தைச் சேர்ந்த கொளஞ்சி, மின் வாரிய ஊழியர்களான சரவணன், வீரமணி, கடம்பூரைச் சேர்ந்த சுப்பிரமணி, மின் வாரியச் செயற்பொறியாளரான மதன கோபால் காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவருக்கும் திருக்கோவிலூர் அரசு மருத்து வமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கிருந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு போக ஆம்புலன்ஸ் இல்லாததால், பிற மின் வாரிய ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், காயமடைந்த 5 பேரும் முண்டியம்பாக்கம் கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்த வர்களில் கொளஞ்சி, சரவணன் ஆகியோரது நிலைமை கவலைக் கிடமாக உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
34 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago