திண்டுக்கல் அருகே கோயில் திருவிழா பாதுகாப்புக்குச் சென்ற பெண் உதவி ஆய்வாளரை இளைஞர்கள் சிலர் கிண்டல் செய்ததால் போலீஸாருக்கும், அவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக டிஎஸ்பியின் வாகன ஓட்டுநர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் மாரியம்மன் கோயில் திருவிழா நேற்று முன்தினம் இரவு நடந்துள்ளது.
திருவிழா பாதுகாப்புக்கு சின்னாளப்பட்டி உதவி ஆய்வாளர் ராணி, சிறப்பு எஸ்.ஐ. திலீப்சிங் மற்றும் போலீஸார் சென்றுள்ளனர். அப்போது இளைஞர்கள் சிலர், பெண் உதவி ஆய்வாளரை கைபேசியில் படமெடுத்து கிண்டல் செய்தனராம்.
இந்த சம்பவம் தொடர்பாக அவர் மற்ற போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அங்கு வந்த சிறப்பு எஸ்.ஐ. திலீப்சிங் மற்றும் போலீஸார் கிண்டல் செய்தவர்களை கண்டித்த போது, மோதல் ஏற்பட்டது.
இச்சம்பவத்தில் உதவி ஆய்வாளர் ராணி, சிறப்பு எஸ்.ஐ. திலீப்சிங், இளைஞர் காவல்படையை சேர்ந்த கண்ணன் ஆகியோர் காய மடைந்தனர். அவர்கள் நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவலறிந்த செய்தியாளர்கள் அங்கு சென்றதால் அவர்கள் மூவரும் அங்கிருந்து வேறு மருத்து வமனைக்கு இடமாற்றப்பட்டனர்.
இதற்கிடையே போலீஸாரை தாக்கியதாக டிஎஸ்பியின் வாகன ஓட்டுநர் அழகர்சாமி, அவரது உறவினர்கள் தயாளன், சரவணன், செந்தில் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago