கடல் சீற்றம் காரணமாக ராமேசு வரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்குச் செல்லவில்லை.
வங்கக் கடலில் ஆந்திராவின் வடக்கு எல்லைக்கும், ஒடிசா வின் தெற்கு எல்லைக்கும் இடையே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருந்தது. அது தீவிரமடைந்து ஒடிசா மாநிலத்தை நோக்கி நகர்ந் தது. இதனால் மீனவர்கள் ஆழ் கடல் பகுதிக்குச் சென்று மீன் பிடிக்க வேண்டாம் என வலி யுறுத்தப்பட்டனர்.
இந்நிலையில், ஒடிசா மாநிலம் பூரி மற்றும் கோபால் பூர் இடையே ஞாயிற்றுக்கிழமை காலை காற்றழுத்த தாழ்வு நிலை கரையைக் கடந்தது. பின்னர் பாம்பன் துறைமுகத்தில் ஏற்றப்பட்டிருந்த எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டது. இதனால் ராமநாதபுரம், மன்னார் வளைகுடா மற்றும் பாக். ஜலசந்தி கடலில் நேற்று அதிகபட்சமாக மணிக்கு 55 கி.மீ. வரை பலத்த காற்று வீசியது. அலைகள் வழக்கத்தைவிட அதிக சீற்றத்துடன் காணப் பட்டது. இதனால் விசைப் படகு மீனவர்கள் 5 ஆயிரம் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
முக்கிய செய்திகள்
தமிழகம்
23 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago