‘கல்பனா சாவ்லா’ விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

By செய்திப்பிரிவு

தமிழக அரசு சார்பில் வீரதீர செயலுக்காக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் ‘கல்பனா சாவ்லா’ விருதுக்கு தகுதியுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் - செயலர் ஷம்பு கல்லோலிகர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: ''தமிழக அரசு சார்பில் வீரமான, தைரியமிக்க, எதையும் எதிர்கொள்ளgf கூடிய ஆற்றல்மிக்க ஒரு பெண்மணிக்கு அவரது துறை சார்ந்த பணி அல்லது நடவடிக்கைக்காக ‘கல்பனா சாவ்லா’ விருது வழங்கப்பட்டு வருகிறது. 2015-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ‘உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், எண் 116-ஏ, ஈவேரா, பெரியார் நெடுஞ்சாலை, நேரு பூங்கா, சென்னை 600 084’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜூன் 30. விண்ணப்ப உறை மீது ‘2015-ம் ஆண்டு கல்பனா சாவ்லா விருதுக்கான விண்ணப்பம்’ எனக் குறிப்பிட்டு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்