தஞ்சையில் கண்கவர் ஹெலிகாப்டர் சாகசம்: ஆயிரக்கணக்கானோர் ரசித்தனர்

தஞ்சாவூர் விமானப்படை நிலையத்தில் ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கண்ணைக் கவர்ந்த இந்நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கானோர் பார்த்து ரசித்தனர்.

தஞ்சாவூர் விமானப்படை நிலையத்தின் வெள்ளி விழாவையொட்டி இந்திய விமானப் படையின் ‘மயில்’ ஹெலிகாப்டர் சாகச குழுவினர், கேப்டன் ஏ.எஸ்.அபயங்கர் தலைமையில் நேற்று காலை 8.30 மணி முதல் 9.15 மணி வரை 4 ஹெலிகாப்டர்களில் கண்ணைக் கவரும் வகையிலான பல்வேறு சாகசங்களை நிகழ்த்திக் காட்டினர்.

அதைத் தொடர்ந்து, இந்திய விமானப் படையின் ‘ஆகாஷ் கங்கா’ ஸ்கை டைவிங் குழுவினர், கேப்டன் கஜானன் யாதவ் தலைமையில் போர் விமானத்திலிருந்து பாராசூட்கள் உதவியுடன் குதித்து சாகசம் நிகழ்த்தினர்.

இந்த சாகசங்களை பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்