தாம்பரத்தில் ஒரு ரவுடியை 6 பேர் கொண்ட கும்பல் கல்லால் அடித்து கொலை செய்தது.
சென்னை கிழக்கு தாம்பரம் இரும்புலியூர் பெரியார் நகரைச் சேர்ந்தவர் பாலாஜி(29). நேற்று மதியம் 1 மணியளவில் வீட்டருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் பாலாஜியிடம் தகராறில் ஈடுபட் டுள்ளனர். பின்னர் அவர்கள் பாலாஜியை சரமாரியாக அடித்து, அருகே இருந்த கல்லை எடுத்து அவரது தலையில் போட்டனர். இதில் பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து 6 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பீர்க்கன்காரணை போலீஸார் விரைந்து வந்து பாலாஜியின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
பாலாஜி மீது ஒரு கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. அவருக்கு தீபா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago