திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங் களில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந் தாய்வு, வரும் ஜூலை 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை திருவூரில் நடக்கிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறு வனங்களில், தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கான முதலா மாண்டு மாணவர் சேர்க்கை, இணையதளம் வழியாக ஒற்றைச் சாளர முறையில் நடைபெறுகிறது. இதற்கான கலந்தாய்வு வரும் ஜூலை 1-ம் தேதி தொடங்கி 4-ம் தேதி வரை, திருவள்ளூர் அருகே திருவூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற உள்ளது.
ஜூலை 1-ம் தேதி மாற்றுத் திறனாளிகள், சுதந்திர போராட் டத் தியாகிகளின் பேரன், பேத்திகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் மகன்/மகள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கும், ஆங்கிலம், தெலுங்கு, உருது உள்ளிட்ட மொழிப் பாடங்களை படித்தவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. ஜூலை 2-ம் தேதி, தொழிற்பிரிவு மற்றும் கலை பிரிவினருக்கும், ஜூலை 3-ம் தேதி மற்றும் ஜூலை 4-ம் தேதிகளில் அறிவியல் பிரிவினருக்கும் கலந் தாய்வு நடைபெறும்.
கலந்தாய்வுக் கூட்டத்துக்கான அழைப்பு கடிதங்கள் கிடைக்கப் பெற்ற தகுதியான விண்ணப்ப தாரர்கள், தங்களின் கல்வி உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்க ளோடும் கலந்தாய்வில் பங்கேற்குமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
39 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago