நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியில்லை: வாகை சந்திரசேகர் அறிவிப்பு

நடிகர் சங்கத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று நடிகர் சங்கத்தின் பொருளாளராக இருந்துவரும் வாகை சந்திரசேகர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாட்டில் உள்ள எல்லா அமைப்புகளுக்கும் அரசின் ஆதரவு தேவை. அரசிடம் தங்கள் தேவைகளைக் கேட்க உரிமை உண்டு. ஆனால் அமைப்புக்குள் அரசியலை நுழைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. நடிகர் சங்கத்தின் தலைவரான சரத்குமார் ஜெயலலிதாவின் ஆட்சியை புகழ்ந்து தள்ளினார்; துதி பாடினார். அத்தோடு நில்லாமல் தலைவர் கலைஞரை தரம் தாழ்த்தி பேசினார்.

சங்கக் கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது சரத்திடம் பலமுறை நான் சொல்லியும் அவர் தன் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.

நான் கலைஞரிடம் வைத்திருக்கும் அன்பு, விசுவாசம், பாசம், திமுகழகத்திடம் வைத்திருக்கும் நம்பிக்கை, உறுதி, கட்டுப்பாடு இவற்றை சீண்டிப்பார்க்கும் எவரோடும் என் பயணம் இருக்காது. சரத்குமார் அவர்களுடன் சேர்ந்து பணியாற்றுதல் என்பது முடிவுற்ற கதை. என் மனதை நான் அறிவேன். அறிந்த வழியில் ஆழ்ந்து பயணிப்பேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

55 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்