ஐம்பது மணி நேரம் போலீஸ் காவல் முடிந்து கலால் டிஎஸ்பி தங்கவேலு ஆம்பூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை மாஜிஸ்திரேட் ஆனந்தராஜ் தள்ளுபடி செய்தார். இதையடுத்து வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட டிஎஸ்பியிடம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவு நகல் வழங்கப்பட்டது.
செம்மரக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட வேலூர் கலால் டிஎஸ்பி தங்கவேலுவிடம் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என ஆம்பூர் தாலுகா போலீஸார் ஆம்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து தங்கவேலுவிடம் 50 மணி நேரம் போலீஸ் காவலில் விசாரணை நடத்த அனுமதி வழங்கி ஆம்பூர் மாஜிஸ்திரேட் ஆனந்தராஜ் உத்தரவிட்டார்.
அவரிடம், நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் ஓரிரு கேள்விகளைத் தவிர மற்ற கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில், ஜூன் 25-ம் தேதி வரை அவரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago