எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான முதல் கட்ட கலந்தாய்வில் தேர்வான 90 சதவீதம் மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேர்வதற்கான சேர்க்கை அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு செயலாளர் டாக்டர் சுதா சதாசிவம் தெரிவித்தார்.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,257 எம்பிபிஎஸ் இடங்கள், 8 தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசுக்கான 597 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 2,939 இடங்களை நிரப்புவதற்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடந்தது. மொத்தம் 7 நாட்கள் நடந்த கலந்தாய்வில் அனைத்து எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களும் நிரப்பப்பட்டன. இவர்களில் பழைய மாணவர்கள் 544 பேர் கல்லூரிகளில் தங்களுக்கான இடங்களை தேர்வு செய்தனர்.
உயர் நீதிமன்றத்தில் நடை பெற்ற வழக்கின் அடிப்படையில் கல்லூரிகளில் சேர்வதற்கான அனுமதி ஆணை வழங்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் உயர் நீதிமன் றத்தில் நேற்று முன்தினம் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை யடுத்து தேர்வான மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேர்வதற் கான சேர்க்கை அனுமதி ஆணை வழங்கும் பணி, சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட் டத்தில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் கூட்ட அரங்கில் நேற்று முன்தினம் தொடங்கியது. பகல் இரவு பாராமல் 24 மணி நேரமும் தேர்வான மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டு வருகிறது.
வெளியூர்களில் உள்ள மாணவர் கள் பெற்றோருடன் வந்து சேர்க்கைக்கான ஆணைகளை வாங்கிச் செல்கின்றனர். இதுதொடர்பாக மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு செயலாளர் டாக்டர் உஷா சதாசிவம் கூறும்போது, “முதல் கட்ட கலந்தாய்வில் தேர்வான மாணவர் களுக்கு கல்லூரிகளில் சேர்வதற் கான சேர்க்கை ஆணை வழங்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.
இதுவரை 90 சதவீதம் மாணவர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. சேர்க்கைக்கான அனுமதி ஆணையை பெற்ற மாணவர்கள் ஜூலை 2-ம் தேதிக்குள் தேர்வு செய்த கல்லூரிகளில் சேர வேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago