இந்திய - இலங்கை மீனவர் மே 12-ல் பேச்சுவார்த்தை: கொழும்பில் நடைபெறுகிறது

இந்திய, இலங்கை மீனவர்களுக்கு இடையிலான இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை மே 12-ம் தேதி கொழும்பில் நடைபெறுகிறது.

பாக் நீரிணைப் பகுதியில் இருநாட்டு மீனவர்களுக்கு இடையே நீண்டகாலமாகத் தொட ரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண மீனவர் சங்க பிரதிநிதிகள் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி கடந்த ஜனவரி 27-ம் தேதி சென்னையில் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து மார்ச் 13-ல் இரண்டாம்கட்ட பேச்சு வார்த்தை நடைபெறுவதாக இருந்தது. பல்வேறு காரணங்களால் மார்ச் 27-ம் தேதிக்கு தள்ளிவைக்கப் பட்டது. ஆனால் அன்றைய தினமும் பேச்சுவார்த்தை நடைபெற வில்லை. இந்நிலையில் மே 12, 13-ம் தேதிகளில் இருதரப்பு மீனவர்கள் பேச்சுவார்த்தையை நடத்தலாம் என்று இலங்கை அரசுக்கு இந்திய அரசு அண்மையில் கடிதம் அனுப்பியது. இதன்படி இலங்கை மீன் வளத் துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னேவின் அறிவுரைப்படி இரு தரப்பு மீனவர்களுக்கு இடையிலான இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை மே 12-ம் தேதி கொழும்பில் நடைபெறும் என்று அந்த நாட்டு மீன் வளத் துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியத் தரப்பில் பல்வேறு மீனவர் சங்கங்களைச் சேர்ந்த 18 பிரதிநிதிகளும் 8 அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் பங்கேற் கின்றனர். இலங்கை தரப்பில் 20 பிரதிநிதிகளும் 10 அதிகாரிகளும் கலந்துகொள்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்