25% இட ஒதுக்கீட்டின்கீழ் சேர்த்த ஏழை மாணவர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு

25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் மாவட்ட வாரியாக எத்தனை ஏழை மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்? என்ற பட்டியலை மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவு மாணவர்களுக்கு தொடக்க நிலை வகுப்புகளில் (எல்கேஜி, 1-ம் வகுப்பு) 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இதற்கு ஆகும் செலவை (அரசு நிர்ண யித்த கல்விக் கட்டணம்) மத்திய,மாநில அரசுகள் சம் பந்தப்பட்ட தனியார் பள்ளிக்கு வழங்கிவிடும்.

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 2015-16-ம் கல்வி ஆண்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை வெளியிடுமாறு ஒரு வழக்கில் பள்ளிக் கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலை யில், 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை விவரங்களை ( >www.tnmatricschools.com) மாவட்ட வாரியாக வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தனியார் பள்ளிகள், அங்கு தொடக்கநிலை வகுப்புகளில் உள்ள மொத்த இடங்கள், 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்ட ஏழை மாணவர்களின் எண்ணிக்கை ஆகியவை இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. தமிழகம் முழுவதும் 3,720 தனியார் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை விவரங்களை இதன்மூலம் தெரிந்து கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்